• Download mobile app
19 May 2024, SundayEdition - 3021
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சொல்வதெல்லாம் உண்மை நிகழ்சிக்கு தடை!

May 30, 2018 தண்டோரா குழு

தனியார் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருந்த சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை ஒளிபரப்ப உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது.

பிரபல தனியார் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் சொல்வதெல்லாம் உண்மை என்கிற நிகழ்ச்சியை நடிகையும் இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன் தொகுத்து வழங்குகிறார்.இந்நிகழ்ச்சி குடும்ப பிரச்சினைகளை குறித்து தீர்வு காண்பதாக நடத்தப்பட்டு வந்தது.மக்களிடையே இந்த நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு இருந்தாலும் பல்வேறு தரப்பினரிடம் எதிர்ப்பும் இருந்து கொண்டிருந்தது.

இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த கல்யாண சுந்தரம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தார்.அந்த வழக்கில் இந்நிகழ்ச்சி ஏழை மக்களின் அடிப்படை மற்றும் தனி மனித உரிமைகளை பாதிக்கிறது என்று குறிப்பிட்டிருந்தார்.இந்த வழக்கு மீதான விசாரணை இன்று நடைப்பெற்றது.அதில் இவ்வழக்கை விசாரித்த நீதிபதி சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை ஒளிபரப்ப இடைக்காலத்தடை விதித்து உத்தரவிட்டார்.

மேலும் படிக்க