• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் ஊதிய உயர்வை கண்டித்து வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

May 30, 2018 தண்டோரா குழு

மத்திய அரசு அறிவித்த 2% ஊதிய உயர்வை கண்டித்து கோவை ரயில்நிலையம் அருகேயுள்ள பரோடா வங்கியின் முன் இருநூறுக்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் இரண்டு நாள் வேலை நிறுத்தத்தின் தொடக்கமாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மே 5 ஆம் தேதி நடந்த வங்கி ஊழியர்களின் ஊதிய உயர்வு கூட்டத்தில் மத்திய அரசு 2% உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்துள்ளது.2% ஊதிய உயர்வை கண்டித்து தேசிய உடமையாக்கப்பட்ட வங்கிகளில் பணிபுரியும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இரண்டு நாள் வேலை நிறுத்ததில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவை ரயில்நிலையம் எதிரே உள்ள பரோடா வங்கியில் நூற்றுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் மத்திய அரசையும்,இந்திய வங்கிகளின் சங்கத்தையும் கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

மேலும்,வங்கியிலுள்ள வார கடன்களை வசூலிக்கவும், அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்,வங்கிகளை தனியார் மயமாக்கக்கூடாது எனவும் வங்கிகளின் சேவை அனைத்து மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என வங்கி ஊழியர்கள் போராடி வருவதாக தெரிவித்தனர்.

வங்கி ஊழியர்களின் ஊதிய உயர்வை உயர்த்த மத்திய அரசு முன்வர வேண்டும் இல்லையென்றால் நீண்ட நெடிய போராட்டத்தை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்தனர்.

கோவை மாவட்டத்தில் 460 வங்கிகளும் 1200 ஏ டி எம் மையங்கள் இரண்டு நாளைக்கு செயல்படாது எனவும்,இதனால் 20 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படும் என கோவை மாவட்ட வங்கிகளின் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் ராஜன் தெரிவித்தார்.

மேலும் படிக்க