• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

துயரத்தில் இருக்கும் தூத்துக்குடி மக்கள் என்னை பார்த்தால் மக்கள் மகிழ்ச்சியடைவார்கள் – ரஜினிகாந்த்

May 30, 2018 தண்டோரா குழு

துயரத்தில் இருக்கும் தூத்துக்குடி என்னை பார்த்தால் மக்கள் மகிழ்ச்சியடைவார்கள் என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

கடந்த 22-ம் தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது.இதனை தொடர்ந்து போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தனர்.மேலும்,பலர் காயமடைந்தது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதற்கிடையில்,பாதிக்கப்பட்ட மக்களை பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.இந்நிலையில்,துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களையும் காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் ஆறுதல் கூறவும் நடிகர் ரஜினி தூத்துக்குடி சென்றார்.

முன்னதாக போயஸ் தோட்ட இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

“தூத்துக்குடியில் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்க்க இருக்கிறேன். என்னை பார்த்தால் மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள் என நம்புகிறேன்.மேலும்,தூத்துக்குடியில் கட்சி நிர்வாகிகளை சந்திக்கும் வாய்ப்பு இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க