May 28, 2018
தண்டோரா குழு
பாரிஸ் நகரில் நான்காவது மடியில் உயிருக்கு போராடியபடி தொங்கிய குழந்தையின் உயிரை காப்பாற்றிய மாலி நாட்டு அகதிக்கு பிரான்ஸ் குடியுரிமை அளிக்கப்படும் என பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரன் கூறியுள்ளார்.
மாலி நாட்டை சேர்ந்த மமூது கசாமா வேலை தேடி பிரான்ஸ் நாட்டுக்கு வந்துள்ளார். இந்நிலையில், பாரிஸ் ரோட்டு பகுதியில் மமூது நடந்து கொண்டிருந்தார். அப்போது ஒரு அடுக்குமாடி குடியிருப்பு முன்பு கூட்டமாக மக்கள் நின்றுகொண்டு இருந்தனர். இவர் அங்கு சென்று பார்த்தப்போது கட்டிடத்தின் 4 வது மாடியில் பால்கனியில் குழந்தை அழுதபடி தொங்கிக் கொண்டிருந்தது. அங்கு குழந்தையின் பெற்றோர் விட்டில் இல்லை இதை பார்த்த பக்கத்து விட்டில் இருக்கும் நபர் ஒருவர் குழந்தையை பிடித்து கொண்டிருந்தார். இதைப்பார்த்த அங்கு நின்றுக்கொண்டிருந்த யாரும் குழந்தையை காப்பாற்ற முன்வரவில்லை.
ஆனால் சற்றும் யோசிக்காமல் மமூது கசாமா ஸ்பைடர் மேன் போல் கட்டடத்தின் முன்புறத்தில் உள்ள சுவரை பிடித்தபடி சிலந்தி போல் மேலே ஏறினார். பின்பு மாடியில் தொங்கிய சிறுவனை பத்திரமாக காப்பாற்றினார். தீயணைப்பு படையினர் அங்கு வந்தனர் அதற்குள் குழந்தையை மமூது கசாமா காப்பாற்றிவிட்டார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது இதனால் மமூது கசாமாவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
இந்த சம்பவம் நடந்தபோது விட்டில் பெற்றோர் இல்லாததால் போலீஸ் இது குறித்து அவர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும் ஸ்பைடர் மேன் போல் குழந்தையை காப்பாற்றிய மமூது கசாமாவை பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரன் நேரில் அழைத்து பாராட்டினர். மமூது கசாமாவின் வீரத்தை பாராட்டி கவுரவிக்கும் வகையில் அவருக்கு பிரான்ஸ் நாட்டு நிரந்தர குடியுரிமையை அளிப்பதாகவும் தீயணைப்பு துறையில் பனி வழங்கப்படும் என்றும் அதிபர் இமானுவேல் மேக்ரன் அறிவித்துள்ளார்.