• Download mobile app
20 Jun 2026, SaturdayEdition - 3783
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த அதிமுக ஐ.டி. நிர்வாகி திடீர் நீக்கம்!

May 28, 2018 தண்டோரா குழு

அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவைச் சேர்ந்த ஹரிபிரபாகரன் கட்சியிலிருந்து திடீர் நீக்கம் செய்யப்பட்டார்.

அதிமுகவின் காஞ்சி கிழக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச்செயலாளராக இருந்தவர் ஹரிபிரபாகரன் தூத்துக்குடியில் துணை முதல்வர் ஓபிஎஸ் துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை இன்று சந்த்தித்தார். அப்போது, பத்திரிக்கையார்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.
இது குறித்து ஹரிபிரபாகரன் தனது டுவிட்டர் பக்கத்தில் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாக கருத்து தெரிவித்துள்ளார். இது பத்திரிகையாளர்கள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாக ட்விட்டரில் கருத்து தெரிவித்ததால் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவைச் சேர்ந்த ஹரிபிரபாகரன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கி
ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகிய இருவரும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மேலும் படிக்க