• Download mobile app
20 Jun 2026, SaturdayEdition - 3783
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

குன்னூரில் தொடங்கியது 60 வது பழக் கண்காட்சி

May 26, 2018 தண்டோரா குழு

நீலகிரி மாவட்டம் குன்னூரில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் 60வது பழக்கண்காட்சி வெகு விமர்சையாக இன்று தொடங்கியுள்ளது.

கோடைக் காலத்தின் சிறப்பாக சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் வருடம் தோறும் பூக்கள் கண்காட்சி பழக்கண்காட்சி குன்னூரில் நடத்தப்படும். இறுதி நிகழ்ச்சியாக இந்தாண்டிற்கான 60வது பழக்கண்காட்சி இன்று குன்னூரிலுள்ள சிம்ஸ் பூங்காவில் தொடங்கியுள்ளது.

இந்த பூங்காவில் பல அரிய வகை மரங்கள், மூலிகைச் செடிகள் இருக்கின்றன. மேலும் கேம்பர், காகிதம் மரம், பென்சில், யானைக்கால், ஸ்ட்ராபெரி, டர்பன்டைன் என வெளிநாடுகளில் மட்டுமே காணப்படும் பல அழகிய மரங்கள் உள்ளன. இங்குள்ள ருத்ராட்ச மரம், சிம்ஸ் பூங்காவின் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது.

மேலும் இமயமலை நேபாளம் போன்ற பகுதிகளில் மட்டுமே காணப்படும் ருத்ராட்சம் மரம் இந்த பூங்காவில் நடவு செய்யப்பட்டு பாதுக்காக்கப்பட்டு வருகின்றன. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சிக்கு பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை நீலகிரி மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.

மேலும் படிக்க