• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

“ரத்தம் வரவில்லை என்றால் விட்டுவிடுங்கள்” ஆடியோவில் ஜெயலலிதா பேசியது என்ன?

May 26, 2018 தண்டோரா குழு

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில்,விசாரணை ஆணையத்தில் ஜெயலலிதா தனக்கு ஏற்பட்ட மூச்சுத் திணறல் குறித்து பேசிய ஆடியோ பதிவை, மருத்துவர் சிவக்குமார் இன்று தாக்கல் செய்தார்.

அந்த ஆடியோவில், என்ன வேண்டும் என்று ஒருவர் கேட்க மூச்சுத் திணறலோடு ஜெயலலிதா இருமும் ஒலி கேட்கிறது. ரத்த அழுத்தம் 140/80 என அதிகமாக இருப்பதாக மருத்துவர் தெரிவிக்க, இது எனக்கு நார்மல் தான் என ஜெயலலிதா தெரிவிக்கிறார். ரத்தம் எடுக்க முடியவில்லை என்றால் விட்டுவிடுங்கள் என்கிறார் ஜெயலலிதா. அதைபோல் தியேட்டரில் ரசிகன் விசில் அடிப்பது போல் மூச்சுத் திணறலின்போது சத்தம் வருகிறது என்கிறார். ஜெயலலிதா அடிக்கடி இருமிக் கொண்டே பேசுவது ஆடியோவில் பதிவாகியுள்ளது.

மேலும் படிக்க