May 26, 2018
தண்டோரா குழு
மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.
தமிழ்நாடு,புதுச்சேரி,ஆந்திரா,கா்நாடகா,மகாராஷ்டிரா,அந்தமான் உள்ளிட்ட இடங்களில் மொத்தம் 71 ஆயிரம் போ் தோ்வு எழுதினா்.தமிழகத்தில் மட்டும் 16 ஆயிரத்து 500 மாணவா்கள் தோ்வு எழுதினா்.
சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 83.01% மாணவ,மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.தேர்ச்சி சதவிகித அடிப்படையில் திருவனந்தபுரம் பகுதியில் அதிகபட்சமாக 97.32 சதவீதம் மாணவர்கள் வெற்றி பெற்று முதலிடம் பிடித்துள்ளனர்.இரண்டாவதாக சென்னை 93.87% மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.தொடர்ந்து டெல்லி மாணவர்கள் 89% பேர் வெற்றி பெற்றுள்ளனர்.
மேலும்,தேர்வு முடிவுகளைh www.cbseresults.nic.in.http://www.cbse.nic.in என்ற இணையதளங்களில் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.