May 25, 2018
தண்டோரா குழு
கோவையில் வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 840 கிலோ குட்காவை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கோவையை அடுத்த ராஜ வீதி பகுதியில் சட்ட விரோதமாக குட்கா கொண்டு வரப்படுவதாக உணவு பாதுகாப்பு துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதனையடுத்து இன்று காலை சோதனை நடத்திய போது பெங்களூரில் இருந்து கடத்தி வரப்பட்ட குட்கா வாகனத்தில் இருந்தது.
பின்னர் அவர்களிடம் இருந்து 840 கிலோ குட்காவை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.சோதனையின் போது குட்கா கடத்தி வரப்பட்ட வாகனத்தை ஓட்டி வந்த ஒட்டுநர் தப்பி ஓடினார்.பின்னர் ராஜஸ்தானை சேர்ந்த உரிமையாளரை காவல் துறையினர் பிடித்து விசாரித்து வருகின்றனர்.தொடர்ந்து அவ்வப்பொழுது இந்த பகுதியில் குட்கா கடத்தி வரப்படுவதால் இது குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.