• Download mobile app
24 Mar 2026, TuesdayEdition - 3695
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மதிமுக தொண்டர் செல்போன் டவர் மீது ஏறி போராட்டம்

May 24, 2018 தண்டோரா குழு

நாகப்பட்டிணம் மாவட்டம் வண்டலூர் கிராமத்தை சேர்ந்த ம.தி.மு.க. தொண்டர் திலகர்,தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து இன்று அதிகாலை திடீரென செல்போன் டவர் ஒன்றின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார்.

நாகப்பட்டிணம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த வண்டலூர் கிராமத்தை சேர்ந்த ம.தி.மு.க. தொண்டர் திலகர் என்பவர் இன்று அதிகாலை அங்கிருந்த செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதையடுத்து தூத்துக்‍குடிக்‍கு துணை ராணுவத்தை அனுப்பக்‍கூடாது 144 தடை உத்தரவை திரும்பப்பெற வேண்டும், காவல்துறையை தூத்துக்குடி நகரை விட்டு வெளியேற்ற வேண்டும் எனக்‍கூறி செல்ஃபோன் டவரில் ஏறி தற்கொலை முயற்சி மேற்கொண்டர்.

மேலும் 5 மணிநேரம் போராட்டம் நீடித்த நிலையில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தொலைபேசியில் தொடர்புக்கொண்டு திலகரிடம் பேசினார். இதனையடுத்து அவர் தனது போராட்டத்தை கைவிட்டு கீழே இறங்கி வந்தார்.இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் படிக்க