• Download mobile app
24 Mar 2026, TuesdayEdition - 3695
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தூத்துக்குடி,திருநெல்வேலி,கன்னியகுமரி மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கத்தால் மாணவர்கள் அவதி

May 24, 2018 தண்டோரா குழு

தூத்துக்குடி,திருநெல்வேலி,கன்னியாகுமரி மாவட்டங்களில்,இணையதள சேவையை முடக்கியதல் பிளஸ் டூ முடித்த மாணவர்கள் மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியாமல் அவதிக்குள்ளாகினர்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில்,வன்முறை வெடித்ததை தூத்துக்குடி, திருநெல்வேலி,கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு இணையதள சேவையை முடக்கி வைக்க,தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது

தூத்துக்குடியில் போராட்டம் தொடர்பாகச் சமூக வலைதளங்களில்,பரவும் வதந்தியைத் தடுப்பதற்காக,இணையதள சேவைகள் முடக்கப்பட வேண்டும் அதனால் அடுத்த 5 நாட்களுக்கு இணையதள சேவை முடக்க தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு தமிழக உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி உத்தரவிட்டுள்ளார்.

இதனிடையே இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளதால் இந்த 3 மாவட்டங்களைச் சேர்ந்த பிளஸ் டூ முடித்த மாணவர்கள் கல்லூரியில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியாமல் அவதிக்குள்ளாகினர்.

மேலும் படிக்க