May 24, 2018
தண்டோரா குழு
தூத்துக்குடி,திருநெல்வேலி,கன்னியாகுமரி மாவட்டங்களில்,இணையதள சேவையை முடக்கியதல் பிளஸ் டூ முடித்த மாணவர்கள் மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியாமல் அவதிக்குள்ளாகினர்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில்,வன்முறை வெடித்ததை தூத்துக்குடி, திருநெல்வேலி,கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு இணையதள சேவையை முடக்கி வைக்க,தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது
தூத்துக்குடியில் போராட்டம் தொடர்பாகச் சமூக வலைதளங்களில்,பரவும் வதந்தியைத் தடுப்பதற்காக,இணையதள சேவைகள் முடக்கப்பட வேண்டும் அதனால் அடுத்த 5 நாட்களுக்கு இணையதள சேவை முடக்க தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு தமிழக உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி உத்தரவிட்டுள்ளார்.
இதனிடையே இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளதால் இந்த 3 மாவட்டங்களைச் சேர்ந்த பிளஸ் டூ முடித்த மாணவர்கள் கல்லூரியில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியாமல் அவதிக்குள்ளாகினர்.