• Download mobile app
16 May 2025, FridayEdition - 3383
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் மே26ம் தேதி துவங்குகிறது ஆண்கள் மற்றும் பெண்களுக்கான அகில இந்தியக் கூடை பந்து போட்டிகள்

May 24, 2018 தண்டோரா குழு

கோவையில் 53 வது ஆண்களுக்கான நாச்சிமுத்து கவுண்டர் கோப்பை 17வது பெண்களுக்கான சி.ஆர்.ஐ பம்ப்ஸ் கோப்பை மே 26ம் தேதி துவங்கவுள்ளது.

கடந்த 52 ஆண்டுக்காக ஆண்களுக்கான கூடைப்பந்து போட்டி மற்றும் 16 வருடங்களாக பெண்களுக்கான கூடைப்பந்து போட்டி போட்டிகள் நடைபெற்று வருகிறது.இந்த ஆண்டிற்கான போட்டி வரும் வரும் மே 26ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இது குறித்து கோவை மாவட்ட கூடைப்பந்து கழக பொறுப்பு செயலாளர் எஸ். சுரஷ் கூறுகையில்,

இப்போட்டியில் ஆண்கள் பிரிவில் இந்திய அளவில் முன்னணியில் உள்ள 8 அணிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.இதில்,பஞ்சாப் போலீஸ்,புது தில்லி – இந்திய விமானபடை அணி,சென்னை- வருமானவரி அணி,சென்னை அரைஸ் ஸ்டீல் அணி,டெல்லி – இந்தியன் ரயில்வே அணி,பெங்களூரு, ஏ.சி.எஸ் அணி,புது டெல்லி வருமான வரி அணி மற்றும் கோயமுத்தூர் – கோவை மாவட்ட கூடைப்பந்து கழக அணிகளும் பங்கேற்கின்றன.

அதைபோல் பெண்களுக்கான பிரிவில்,கொல்கத்தா – கிழக்கு இரயில்வே,திருவனந்தபுரம் – கேரளா போலீஸ்,ஹூப்ளி – தென் மேற்கு இரயில்வே,சென்னை அரைஸ் ஸ்டீல்ஸ்,மைசூர் – ஸ்போர்ட்ஸ் ஹாஸ்டல்,திருவனந்தபுரம் – கேரள மாநில மின்சார வாரியம்,தமிழ்நாடு ஜூனியர்ஸ் மற்றும் கோயமுத்தூர் – கோவை மாவட்ட கூடைப்பந்து கழகம் அணிகள் பங்கேற்கின்றன.

ஆண்கள் பிரிவில் வெற்றி பெறும் அணிக்கு முதல் பரிசு 1 லட்சம் ரூபாய் மற்றும் நாச்சிமுத்து கவுண்டர் கோப்பையும், இரண்டாம் பரிசாக 50 ஆயிரம் ரூபாய் மற்றும் டாக்டர்.என் மாகலிங்கம் கோப்பையும்,அரையிறுதியில் தோல்வியடைந்த இரு அணிகளுக்கும் தலா 15 ஆயிரம் ரூபாயும் தேர்வு செய்யப்பட்ட அணிக்கு நன்நடத்தை ரேணுகா ராமாநாதன் நினைவு விருதும் வழங்கப்படும்.

பெண்கள் பிரிவில் வெற்றி பெறும் அணிக்கு முதல் பரிசு50 ஆயிரம் ரூபாய் மற்றும் சி.ஆர்.ஐ பப்ம்ஸ் சுழல் கோப்பையும்,இரண்டாம் பரிசாக 25 ஆயிரம் ரூபாய் மற்றும் சுழல் கோப்பையும், அரையிறுதியில் தோல்வியடைந்த இரு அணிகளுக்கும் தலா 10 ஆயிரம் ரூபாயும் சிறந்த விளையாட்டு சிறந்த நம்பிக்கைகான விளையாட்டு வீராங்கனை விருதும் வழங்கப்படும்.

இப்போட்டிகள் மே 26ம் தேதி துவங்கும் இந்த போட்டியில் 29ம் தேதி வரை சுழல் முறையிலும், பின்னர் ஒவ்வொரு முதல் இரண்டு இடங்களில் உள்ள அணிகள் அரையிறுதிக்கும் தகுதி பெறும். இதில் வெற்றி பெற்ற அணிகள் 31ம் தேதி இறுதி போட்டியில் விளையாடவுள்ளன. போட்டி தினமும் மாலை 5 மணிக்கு வஉசி பூங்கா மாநகராட்சி விளையாட்டு அரங்கத்தில் நடைபெறவுள்ளது என்றார்.

மேலும் படிக்க