• Download mobile app
02 May 2024, ThursdayEdition - 3004
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ், எஸ்.பி. மகேந்திரன் பணியிட மாற்றம்

May 23, 2018 தண்டோரா குழு

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி நேற்று நடைபெற்ற பேரணியில் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் வன்முறையாக வெடித்தது.இதைத்தொடர்ந்து போராட்டக்காரர்கள் மீது போலீசார்
துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.60 – க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதற்கிடையில்,இன்று மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியது.அதில் ஒருவர் பலியானார்.5 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தார். இதனால் தூத்துக்குடியில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வெங்கடாச்சலம் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதில் நெல்லை ஆட்சியராக இருந்த சந்தீப்நந்தூரி தூத்துக்குடி ஆட்சியராக நியமனமியக்கப்பட்டுள்ளார். அதைபோல், தூத்துக்குடி எஸ்.பி. மகேந்திரன், வட சென்னை போக்குவரத்து துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக நீலகிரி எஸ்.பி. முரளி ரம்பா, தூத்துக்குடி எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார். தூத்துக்குடியில் நேற்று நடத்த துப்பாக்கிச்சூட்டில் 12 பேர் உயிரிழந்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

மேலும் படிக்க