• Download mobile app
20 Jun 2026, SaturdayEdition - 3783
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை:தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி

May 23, 2018 தண்டோரா குழு

தூத்துக்குடி போராட்டத்தில் துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு கோவை தமிழ் உணர்வாளர்கள் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி செலுத்தினர்.

ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி நேற்று நடைபெற்ற போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டதையடுத்து காவல் துறையினர் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டனர்.இந்த துப்பாக்கி சூட்டில் பத்து பேர் உயிரிழந்தனர்.மேலும் இன்று நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் மேலும் ஒருவர் உயிரிழந்தார்.

இந்நிலையில் உயிரிழந்த பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கோவையை அடுத்த டாடாபாத் பகுதியில் தமிழ் உணர்வாளர்கள் என்ற அமைப்பை சேர்ந்தவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி, மவுன அஞ்சலி செலுத்தினர்.பொதுமக்கள் மீதான இந்த தாக்குதலை கண்டித்து,அனைத்து கட்சியினரை சந்தித்து முழு அடைப்பு போராட்டம் நடத்துவது குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிவித்தனர்.பொதுமக்கள் மீதான இந்த தாக்குதலை நிறுத்தி, ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

மேலும் படிக்க