• Download mobile app
20 Jun 2026, SaturdayEdition - 3783
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டை கண்டித்து கோவையில் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம்

May 23, 2018 தண்டோரா குழு

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து கோவையில் பல்வேறு இடங்களில் வெவ்வேறு கட்சிகள் சார்பாக கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நேற்று தூத்துக்குடியில் நடைபெற்ற பேரணியில் கலவரம் வெடித்ததை அடுத்து,காவல்துறை நடத்திய துப்பாக்கி சூட்டில் 12 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இச்சம்பவத்தை கண்டித்து தமிழக முழுவதும் பல்வேறு கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில் துப்பாக்கி சூட்டிற்கு காரணமான எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தமிழ்நாடு உணவகம் அருகே ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதில் எடப்பாடி அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.

தூப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.இதே போல கோவை டாடாபாத் பகுதியில் தந்தை பெரியார் திராவிட கழகம், மதிமுக,மக்கள் அதிகாரம்,விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் சார்பாக கண்டன ஆர்பாட்டம் நடத்தப்பட்டது.இதில் மத்திய மாநில அரசுகளின் அராஜக போக்கை கண்டித்து முழக்கமிட்டனர். துப்பாக்கி சூடு நடத்தும் சூழலுக்கு தள்ளப்பட்டதாக அமைச்சர் ஜெயகுமார் கூரிய விளக்கத்திற்கும் கண்டனம் தெரிவித்தனர்.

மேலும் மீத்தேன்,ஹைட்ரோகார்பன் திட்டம் போன்றவற்றிக்கு எதிராக போராடாமல் தடுக்கவே, தூத்துக்குடியில் காவல்துறையை வைத்து அராஜக போக்கை கட்டவிழ்த்து விடப்பட்டதாக குற்றம்சாட்டினர்.இதே போல கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பாக நாம் தமிழர் கட்சியினரும் கண்டன ஆர்பாட்டம் நடத்தினர்.கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற கண்டன ஆர்பாட்டத்தில் சுமார் 400 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

மேலும் படிக்க