• Download mobile app
24 Aug 2025, SundayEdition - 3483
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

குண்டூர் கோழி வேப்புடு செய்வது எப்படி!

May 23, 2018 awesomecuisine.com

தேவையான பொருட்கள்:

சிக்கன் – அரை கிலோ

மிளகாய் தூள் – 2௦ கிராம்

வெங்காயம் – இரண்டு (நறுக்கியது)

தக்காளி – ஒன்று (நறுக்கியது)

கரிவேபில்லை – சிறிதளவு

உப்பு – தேவைகேற்ப

மல்லித்தூள் – ஒரு தேகரண்டி

மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை

இஞ்சி, பூண்டு விழுது – 15 கிராம்

அரிசி மாவு – ஒரு தேகரண்டி

மைதா – ஒரு தேகரண்டி

எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

சிக்கன் சுத்தம் செய்து இஞ்சி,பூண்டு,மிளகாய் தூள்,மைதா,அரிசி மாவு,உப்பு சேர்த்து நன்றாக கலக்கி ஊறவைக்கவும்.அரை மணிநேரம் நன்றாக ஊறவிடவும்.பிறகு,கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் போட்டு பொரித்து எடுக்கவும்.

பிறகு,இன்னொரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு சேர்த்து நன்றாக பொன்னிறமாக வதக்கவும்.

பிறகு, மிளகாய் தூள்,மஞ்சள் தூள்,மல்லி தூள்,கறிவேபில்லை சேர்த்து நன்றாக கிளறி தேவையான அளவு உப்பு சேர்த்து வறுத்த சிக்கனை குழம்பில் சேர்க்கவும்.குழம்பு கெட்டியாக வந்தவுடன் இறக்கி பரிமாறவும்.

மேலும் படிக்க