• Download mobile app
05 Nov 2025, WednesdayEdition - 3556
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நிபா வைரஸ் :கோவை வ.உ.சி பூங்காவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க கோரிக்கை

May 22, 2018 தண்டோரா குழு

நிபா வைரஸ் வவ்வால்களின் சிறுநீரிலும்,எச்சம் ஆகியவற்றின் மூலம் பரவுகிறது என்பதால், கோவையில் உள்ள வஉசி உயிரியல் பூங்காவில் ஏராளமான வவ்வால்கள் உள்ளதால் மாநகராட்சியினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது.

கேரளாவில் பரவி வரும் நிபா வைரஸ் நோய் தாக்குதலின் காரணமாக சிலர் உயிரிழந்து உள்ள சூழலில்,கேரளா எல்லையோரம் அமைந்து உள்ள கோவை மாவட்டத்தில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில்,நிபா வைரஸ் வவ்வால்களின் சிறுநீரிலும்,எச்சம் ஆகியவற்றின் மூலம் பரவுகிறது. இதன் மூலம் காய்ச்சல்,கடுமையான தலைவலி,மயக்கம்,மனக்குழப்பம் போன்றவை ஏற்பட்டு மூளை காய்ச்சலாக மாறி உயிரிழப்புகள் ஏற்படுகிறது.எனவே இதற்கு மூலக் காரணமாக இருக்கும் வவ்வால்கள்,கோவையில் உள்ள வஉசி உயிரியல் பூங்காவில் ஏராளமாக உள்ளது என்பதால் தற்போதே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தால் பாதிப்புகள் ஏற்படாதவாறு தடுக்க முடியும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது.

மேலும்,தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் வந்து செல்லும் இந்த பூங்காவில் ஆயிரக்கணக்கான வவ்வால்கள் உள்ளது. எனவே உடனடியாக தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து உள்ளது.

மேலும் படிக்க