• Download mobile app
24 Mar 2026, TuesdayEdition - 3695
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் பலத்த காற்று , இடி மின்னலுடன் கனமழை

May 22, 2018 தண்டோரா குழு

கோவையில் பலத்த காற்று,இடி,மின்னலுடன் மாநகர மற்றும் புறநகரப் பகுதிகளில் கன மழை பெய்து வருவதால் குழுமையான சூழல் நிலவுகிறது.

கோடை காலம் துவங்கியதிலிருந்து வெயில் கடுமையாக சுட்டெரித்து வந்தாலும்,ஓரிரு நாட்கள் விட்டு விட்டு மழை பெய்து வந்தது.இந்நிலையில்,அக்னி நட்சத்திரம் துவங்கியதிலிருந்து தொடர்ந்து மாலை நேரங்களில் கோவை மாவட்டம் முழுவதும் கனமழை பெய்தது.கடந்த இரு நாட்களாக மழை இல்லாத நிலையில்,மீண்டும் இன்று கடந்த ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இடி,மின்னலுடன்,காந்திபுரம், பீளமேடு,ராமாநாதபுரம்,ஆர்.எஸ்.புரம் உள்ளிட்ட நகரப்பகுதிகளில் மட்டுமின்றி, கவுண்டம்பாளையம்,துடியலூர்,சூலூர் போன்ற புறநகரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. காலை முதல் வெயில் சுட்டெரித்து உஷ்ணமாக இருந்த நிலையில்,இரவு கன மழை பெய்வதால் குழுமையான சூழல் நிலவுகிறது.

கோவையில் தொடர்ச்சியாக மழை பெய்தாலும் காலை நேரங்களில் வெயிலின் தாக்கம் இருப்பதால், புழுக்கம் அதிகமாக இருக்கிறது.மழை,காற்று காரணமாக பல்வேறு இடங்களில் மின்வெட்டு இல்லை.மழை பெய்யும் போதெல்லாம் பல்வேறு இடங்களில் ஏற்படும் மின்வெட்டு இரவு முழுவதும் நீடித்து, காலையிலேயே வருவதால் பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.

மேலும் படிக்க