• Download mobile app
15 May 2025, ThursdayEdition - 3382
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கர்நாடக விவகாரத்தை அடுத்து கோவா அரசியலில் திடீர் திருப்பம்

May 17, 2018 தண்டோரா குழு

கோவாவில் நாளை ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோர காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கர்நாடக சட்டபேரவை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் காங்கிரஸ்-மஜத கட்சியினர் கூட்டணியான சேர்ந்து எங்களிடம் 115 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளதாக ஆளுநரிடம் கோரிக்கை விடுத்தனர். அதைபோல் பாஜக 104தொகுதிகளில் வெற்றி பெற்று தனிபெரும்பான்மையாக நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம். எனவே எங்களைதான் ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என பாஜக முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா ஆளுநரிடம் கோரினார். இந்நிலையில் எடியூரப்பாவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்தார். இதற்கு காங்கிரஸ் – மஜத கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்நிலையில், கர்நாடக ஆளுநர் முடிவின் எதிரொலியாக கோவா அரசியலில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. காங்கிரஸின் 16 கோவா எம்எல்ஏக்களும் அணிவகுப்பாக சென்று நாளை ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளதாக கூறப்படுகிறது.

கோவாவில் 2017 பேரவை தேர்தலில் காங்கிரஸ் 17 எம்.எல்.ஏ.க்களுடன் தனிப்பெரும்பான்மையுடன் உள்ளது.பாஜக 13 இடங்களில் வெற்றிபெற்றது. எனினும், பாஜக சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை கைப்பற்றி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க