தேவையான பொருட்கள்:
எலும்பு இல்லாத சிக்கன் – அரை கிலோ,
புதினா இலைகள் – இரண்டு கைப்பிடி,
கொத்தமல்லி தழை – 1 கைப்பிடி,
பூண்டு – 15 பல்,
இஞ்சி – சிறிய துண்டு,
பச்சை மிளகாய் – 4,
மிளகு தூள் – 1 ஸ்பூன்,
எலுமிச்சை சாறு – 2 ஸ்பூன்,
சோள மாவு – இரண்டு ஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு,
எண்ணெய் – பொரிக்க.!
செய்முறை:
சிக்கனை நன்கு கழுவி வடித்து ஒரு பாத்திரத்தில் எடுத்து கொள்ளவேண்டும்.புதினா, கொத்தமல்லி தழையை நன்றாக கழுவி வைக்கவும்.மிக்சியில் புதினா இலைகள், கொத்தமல்லி, ப.மிளகாய், இஞ்சி,பூண்டை போட்டு நன்றாக அரைத்து எடுக்க வேண்டும்.
அரைத்த விழுதை சிக்கன் மேல் போட்டு அதனுடன் சோள மாவு, எலுமிச்சை சாறு, மிளகு தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து 1 மணி நேரம் ஊற வைக்கவும்.அடுப்பில் வாணலியை வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய்யை ஊற்றி காய்ந்தவுடன் சிக்கனை சிறிது சிறிதாக எண்ணெயில் போட்டு முறுகலாக பொரித்து எடுக்கவும்.சிக்கன் நன்றாக வெந்ததும் கடாயில் இருந்து எடுக்கவும்.
டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், ஊர் கேப்ஸ் இணைந்து தமிழ்நாட்டில் 500 மின்சார மூன்று சக்கர வாகனங்களை களமிறங்குகின்றன!
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது