• Download mobile app
20 Jun 2026, SaturdayEdition - 3783
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மூன்று மாதங்களில் 58கோடி போலி முகநூல் கணக்குகளை நீக்கியது பேஸ்புக் நிறுவனம்

May 16, 2018 தண்டோரா குழு

பேஸ்புக் நிறுவனம் கடந்த மூன்றுமாதங்களில்மட்டும்58 கோடிபோலிமுகநூல்கணக்குகளை நீக்கியுள்ளதாகஅறிவித்துள்ளது.

உலகம் முழுவதும் பல கோடி மக்களால் பயன்படுத்தப்படும் சமூக வலைத்தளம் பேஸ்புக். புகைப்படங்கள் மற்றும் வீடியோ பகிர்தல்,கருத்துகளை பகிர்தல் என நாள்தோறும் பேஸ்புக்கை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.இந்நிலையில்,முகநூலை பயன்படுத்தும் சுமார் 5 கோடி கணக்காளர்களின் விவரங்கள் ஒரு ‘ஆப்’ மூலம் திருடப்பட்டதாக புகார் பேஸ்நிறுவனம் சர்ச்சைகள் எழுந்தன. இதுமட்டுமின்றி திருடப்பட்ட தகவல்கள் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா என்ற அரசியல் பிரசார நிறுவனத்திடம் விற்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் பேஸ்புக் நிறுவனம் பெரும் சர்ச்சைகளை சந்தித்து வந்தது.

இதையடுத்து,பேஸ்புக் வலைத்தளத்தில் வன்முறை நோக்கத்தை தூண்டும் படங்கள், ஆபாச படங்கள் மற்றும் பயங்கரவாத கருத்துகளை வெளியிடும் முகநூல் கணக்குகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்,அவ்வாறு வெளியிடப்படும் கணக்குகள் முடக்கப்படும் என்றும் பேஸ்புக் நிறுவனம் அறிவித்திருந்தது.

இந்நிலையில், கடந்த 3 மாதங்களில் மட்டும் 58.3 கோடி போலி முகநூல் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது. அதைபோல் ‘பேஸ்புக்’ கணக்காளர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் வகையில் அந்நிறுவனம் சுமார் 200 செயலிகளுக்கு தடை விதித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க