May 15, 2018
தண்டோரா குழு
தமிழகத்திற்கும்,தமிழர்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி மிரட்டி கொண்டேயிருக்கும் வாட்டாள் நாகராஜ்,சாம்ராஜ் நகரில் படுதோல்வியடைந்தார்.
224 சட்டசபைத் தொகுதிகளை கொண்ட கர்நாடகாவில் 222 தொகுதிகளில் வாக்குப்பதிவு 12-ம் தேதி நடைபெற்றது.தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.வாக்கு எண்ணிக்கையில் பா.ஜனதா 104 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உள்ளது.இதற்கிடையே காங்கிரஸ் 78 இடங்களிலும்,மதசார்பற்ற ஜனதா தளம் 38 இடங்களிலும் வெற்றி பெற்று உள்ளது.சுயேட்சை வேட்பாளர்கள் இரண்டு இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.
இந்நிலையில்,தமிழர்களுக்கு எதிராக எப்பொழுதும் பேசும் கன்னட ஆதரவாளர் கன்னட சலுவாலி கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜ் சாம்ராஜ்நகர் தொகுதியில் போட்டியிட்டு படுதோல்வியடைந்துள்ளார்.அவர் 5,977ஓட்டுகள் மட்டுமே பெற்று டெபாசிட்டை இழந்தார்.