• Download mobile app
14 May 2024, TuesdayEdition - 3016
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் கே.எப்.சி. நிறுவனம் முற்றுகை!

May 15, 2018 தண்டோரா குழு

இலங்கை இனபடுகொலை தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்த கோரி,கோவையில் கே.எப்.சி. நிறுவனத்தை முற்றுகையிட முயன்ற தமிழர் விடியல் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

கடந்த 2009 ம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற தமிழின படுகொலை தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தக் கோரி,மே மாதத்தை போராட்ட மாதமாக தமிழர் விடியல் கட்சியினர் அனுசரித்து வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக கோவை – அவிநாசி சாலையில் உள்ள அமெரிக்க நிறுவனமான கே.எப்.சி.யினை முற்றுகையிட முயன்றனர்.

மேலும்,இனப்படுகொலையில் இந்தியா,அமெரிக்கா நாடுகளுக்கும் பங்கு இருப்பதாகவும், இந்நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் அக்கட்சியினர் தெரிவித்தனர்.இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 26 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

மேலும் படிக்க