May 15, 2018
தண்டோரா குழு
கர்நாடகாவில் பாஜகவின் வெற்றிக்கு பிரதமர் மோடியின் செயல்பாடுகளே காரணம் என்று துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பாராட்டு தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் பாஜகவின் வெற்றிக்கு பிரதமர் மோடியின் செயல்பாடுகளே காரணம் என்றும்,பாஜக வெற்றி பெற்றதற்கு பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவுக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளேன் என்று கூறினார்.மேலும்,புதிதாக பொறுபேற்கவுள்ள எடியூரப்பாவை நேரில் சந்தித்து காவிரி நீரை பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம்.
காவிரி விவகாரத்தில் விரைவில் தமிழகத்தின் நீதி நிலைநாட்டப்படும்,எனவே அனைத்துக் கட்சி கூட்டம் கூட்ட வேண்டிய அவசியமில்லை.கமல் எங்களை சந்தித்த பின்,காவிரி தொடர்பான அவரின் கூட்டத்தில் பங்கேற்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.