• Download mobile app
05 Nov 2025, WednesdayEdition - 3556
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உழவர் சந்தையில் விவசாயிகள் கடை அமைக்க அனுமதி மறுக்கப்படுவதை கண்டித்து விவசாயிகள் போராட்டம்

May 14, 2018 தண்டோரா குழு

கோவை ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தையில் விவசாயிகள் கடை அமைக்க அனுமதி மறுக்கப்படுவதை கண்டித்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் காய்கறிகள் விற்கும் நூதன போராட்டத்தை இன்று நடத்தினர்.

இந்த போராட்டத்தின் போது ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தையில் விவசாயிகள் கடை அமைத்து விற்பனை செய்ய அதிகாரிகள் அனுமதி மறுப்பதாகவும்,அங்கிருந்த பல விவசாயிகளை அதிகாரிகள் வெளியேற்றி இருப்பதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.மேலும் உழவர் சந்தையில் விவசாயிகள் விளைப்பொருட்களை விற்பனை செய்ய அனுமதியளிக்க வேண்டுமெனவும்,விவசாயிகளை வெளியேற்றிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்திய விவசாயிகள், இல்லையெனில் ஆட்சியர் அலுவலகம் முன்பு நிரந்தரமாக காய்கறிகள் கடை அமைத்து விற்பனை செய்ய அனுமதியளிக்க வேண்டும் என தெரிவித்தனர்.

மேலும் படிக்க