• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி

May 12, 2018 தண்டோரா குழு

கோவையில் உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு இன்று விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இந்தியா முழுவதும் உலக செவிலியர் தினத்தையொட்டியும் உலக செவிலியர்களின் தாயான நைட்டிங்கேல் அம்மையாரின் பிறந்த தினத்தையொட்டியும் இன்று பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.

இதன் ஒரு பகுதியாக கோவையில் உள்ள நைட்டிங்கேல் கல்லூரி மாணவ மாணவிகள் செவிலியர்களின் சமூக மற்றும் மருத்துவ சேவை குறித்து பாதைகள் ஏந்தியபடி விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.

இதனை கோவை மாவட்ட துணை ஆட்சியர் ராஜ்குமார் கொடி அசைத்து துவங்கி வைத்தார். குழந்தைகள் நல மருத்துவமனை முதுநிலை கண்காணிப்பாளர் மகிலா டேனியல் அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற இப்பேரணியானது அரசு பெண்கள் பாலிடெக்னிக் முதல் வஉசி பூங்கா வரை சென்று முடிவடைந்தது.இதில் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பேரணியாக கலந்துகொண்டனர்.

மேலும் படிக்க