• Download mobile app
05 Nov 2025, WednesdayEdition - 3556
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு டிஜிட்டல் முறையில் அபராதம் செலுத்தும் புதிய முறை அறிமுகம்

May 10, 2018 தண்டோரா குழு

சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு டிஜிட்டல் முறையில் அபராதம் செலுத்தும் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சாலை விதிகளை மீறுபவர்கள் மின்னணு முறையில் அபராதம் செலுத்தும் புதிய வசதியை காவல் ஆணையர் விஸ்வநாதன் தொடங்கி வைத்தார்.இதன் மூலம்,சாலை விதிகளை மீறுபவர்கள் தங்கள் டெபிட் கார்டு,கிரெடிட் கார்டு,பேடிஎம் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தி அபராதத்தை செலுத்தலாம்.அபராதத்தை வசூலிக்கும் வகையில்,போலீசாருக்கு ஸ்வைப் மெஷின்களும் வழங்கப்பட்டுள்ளன.அபராதம் செலுத்துவோருக்கு அதற்கான மின்னணு ரசிதும் வழங்கப்படும்.

மேலும்,அபராதம் செலுத்த முடியாதவர்கள் தபால் நிலையத்திலோ அல்லது நீதிமன்றத்திலோ சென்று பணமாக அபராதத்தை செலுத்த வேண்டும்.இந்த புதிய திட்டமானது,இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

மேலும் படிக்க