• Download mobile app
05 Nov 2025, WednesdayEdition - 3556
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாநகராட்சி ஆணையாளர் எழுதிய ஒரே கல்லில் 13 மாங்காய் புத்தக வெளியீடு

May 7, 2018 தண்டோரா குழு

கோவை மாவட்ட ஆணையாளர் விஜய்கார்த்திகேயன் IAS எழுதிய “ஒரே கல்லில் 13 மாங்காய்” புத்தக வெளியீடு மதுரையில் நேற்று(மே 6) நடைப்பெற்றது.இந்த புத்தகத்தின் முதல் பிரதியை அவரது தாயார் உமா கண்ணன் வெளியிட மதுரை மகாத்மா பள்ளி முதல்வர் பிரேமலதா பெற்றுக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில்,மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராக ராவ் தலைமை தாங்கினார். தென் மண்டல கூடுதல் தலைமை வனப் பாதுகாவலர் கண்ணன் மற்றும் மதுரை மாநகராட்சி ஆணையர் மற்றும் சிறப்பு அதிகாரி அனிஸ் சேகர் ஆகியோர் கலந்துகொண்டனர்.முன்னதாக
விஜயா பதிப்பகம் தலைவர் வேலாயுதம் வரவேற்றார்.

இந்நிகிழ்ச்சியின் ஒரு பகுதியாக புத்தக எழுதிய எழுத்தாளர் விஜய கார்த்திகேயனுக்கு பாராட்டுகளை சிறப்பு விருந்தினர்கள் தெரிவித்தனர். மேலும்,நிகழ்கால வாழ்க்கைக்கு தேவையான கருத்துகள் இப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்தனர்.

இந்நிகிழ்ச்சியில் கலந்துக் கொண்ட தென் மண்டல கூடுதல் தலைமை வனப் பாதுகாவலர் கண்ணன் கூறுகையில்,இந்நூலில் மூடநம்பிக்கையை தகர்த்தெறியும்,தன்னம்பிக்கை கருத்துக்கள் உள்ளதாகவும், இந்த நூல் இளைஞர்களை தன்னம்பிக்கையுடன் வழிநடத்த உதவும் என்றார்.

மேலும்,பட்டிமன்ற பேச்சாளர் ராஜாராம் மற்றும் ராஜா ஆகியோர் கலந்துக் கொண்டு வாழ்த்து பேசினார்.இவ்விழாவில் கோவை, மதுரை மற்றும் கோவில்பட்டி பகுதிகளை சார்ந்தவர்களும் கலந்துகொண்டனர்.

மேலும் படிக்க