• Download mobile app
24 Mar 2026, TuesdayEdition - 3695
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நீட் தேர்வு: வெளி மாநிலங்களில் மாணவர்கள் சிரமம்

May 5, 2018 தண்டோரா குழு

நீட் தேர்வு நாளை நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு மாணவர்கள் சென்று தேர்வு எழுத உள்ளனர்.தற்போது தேர்வு எழுத வெளி மாநிலம் செல்லும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பல விதங்களில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும்,பள்ளி கல்லூரிகள் அனைத்திற்கும் விடுமுறை விடப்பட்டு உள்ள நிலையில் விடுமுறையை கொண்டாட தங்களது சொந்த ஊருக்கு செல்வதற்கு இரயில் மற்றும் பேருந்துக்களில் முன்பதிவு ஏற்கெனவே செய்து விட்டனர்.

இந்நிலையில் மத்திய அரசு மருத்துவ நுழைவு தேர்வை மாணவர்கள் மாநிலம் விட்டு மாநிலம் சென்று எழுத வேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளி உள்ளது.

மாணவர்கள் நீட் தேர்விற்கு தயார் ஆவதற்கு பெரும் சிரமப்பட்டு வரும் வேலையில் அண்டை மாநிலங்கள் சென்று நுழைவு தேர்வு எழுதுவது அவர்களுக்கு பேரிடியாக அமைந்துள்ளது.
தற்போது அண்டை மாநிலங்கள் சென்று நுழைவு தேர்வு எழுத உள்ள மாணவர்கள் தங்களது பெற்றோர்களுடன் சென்று வருகின்றனர். அவ்வாறு செல்லும் அவர்களுக்கு அந்த ஊர் புதிது என்பதாலும் மொழி புரியாமலும்,எங்கு தங்குவது எங்கு செல்வது என்று ஒன்றும் புரியாமல் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து அண்டை மாநிலமான கேரளா எர்ணாகுளம் பகுதியில் ஜவுளி கடை வைத்து தொழில் செய்து வரும் திருமலை என்பவர் கூறுகையில்,

“நான் 20 வருடமாக கடை வைத்துள்ளேன்.தற்போது நீட் தேர்வு எழுத வரும் தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் எங்கு செல்ல வேண்டும் எந்த பேருந்தில் ஏறுவது தங்குவது எப்படி என்று புரியாமல் தவித்து வருகின்றனர். தற்போது வரை 150க்கும் மேற்பட்டவர்கள் வந்து இருப்பார்கள் நான் அவர்களுக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறேன். ஏன்,என்றால் எனது மகளும் திருநெல்வேலியில் நீட் தேர்வு எழுத உள்ளார். அவரும் சிரமப்பட்டு தான் அங்கு சென்றார். அதனால் நான் இங்கு வருபவர்களுக்கு முடிந்த உதவிகளை செய்து வறுகிறேன்”.இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க