May 5, 2018
தண்டோரா குழு
மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வு மே 6 ம் தேதி நடைபெறுகிறது.தமிழகத்தில் நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் ஈரோட்டு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு கேரளாவில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து வெளிமாநிலங்களுக்கு நீட் தேர்வு எழுத செல்லும் மாணவர்களுக்கு 2 ம் வகுப்பு ரயில் கட்டணம் மற்றும் ரூ.1000 பயணப்படி வழங்கப்படும் என தமிழக அரசு நேற்று அறிவித்தது.
இந்நிலையில்,நெல்லையிலிருந்து நீட் தேர்வு எழுத கேரள மாநிலம் எர்ணாகுளம் செல்லும் மாணவர்களுக்கு நெல்லையிலிருந்து இன்று காலை 7.30 மணி முதல் இரவு வரை 8 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இந்த சிறப்பு பேருந்துகளை நெல்லை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி மற்றும் ராதாபுரம் அதிமுக எம்.எல்.ஏ., இன்பத்துரை ஆகியோர் துவக்கி வைத்தனர்.