• Download mobile app
20 Jun 2026, SaturdayEdition - 3783
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நீட் தேர்வு எழுத செல்லும் மாணவர்களுக்கு எந்த சிறப்பு ரயிலும் ஒதுக்க முடியாது : மத்திய ரயில்வே துறை அமைச்சகம்

May 4, 2018 தண்டோரா குழு

நீட் தேர்வு எழுத செல்லும் மாணவர்களுக்கு எந்த சிறப்பு ரயிலும் ஒதுக்க முடியாது என மத்திய ரயில்வே துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவு தேர்வு நாடு முழுவதும் வரும் ஞாயிறு 6ம் தேதி நடக்கிறது. தமிழகத்தில் மதுரை,நெல்லை,திருச்சி,கோவை,நாமக்கல் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மட்டுமே இந்த தேர்வுக்கான மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

நெல்லை,தூத்துக்குடி,கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ-மாணவிகளுக்குக் கேரளாவின் எர்ணாகுளம் மற்றும் பத்தனம்திட்டா பகுதியிலும் பல்வேறு மாணவ மாணவிகளுக்கு ராஜஸ்தானிலும் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன.இதனால் மாணவர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.இதனால் மாணவர்களுக்கு பலரும் உதவி புரிந்து வருகின்றனர்.

இதற்கிடையில் வெளிமாநிலங்களில் நீட் தேர்வு எழுத செல்லும் மாணவர்களுக்கு தலா ரூ.1,000 வழங்கப்படும் என்றும்,மாணவர்களுக்கு 2-ம் வகுப்பு ரயில் கட்டணத்தையும் அரசே வழங்கும் என்றும்,மாணவ-மாணவிகள் உடன் செல்லும் நபருக்கும் பயணப்படியாக 2-ம் வகுப்பு ரயில் கட்டணம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் மத்திய ரயில்வே துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சிறப்பு ரயில் ஒதுக்க வேண்டும் என தமிழக அரசு இதுவரை எந்த கோரிக்கையும் வைக்கவில்லை. 8,500க்கும் மேற்பட்டோர் செல்லும் வகையில் உடனடியாக சிறப்பு ரயில் ஏற்பாடு செய்ய முடியாது.ஐபிஎல் போட்டிக்காக புனே சென்ற ரயில் வடகிழக்கு மாநிலங்களில் இருப்பதால் கூடுதல் ரயில் இல்லை.தமிழகத்திலிருந்து வெளிமாநிலங்களுக்கு நீட் தேர்வு எழுத செல்லும் மாணவர்களுக்கு தனியாக சிறப்பு ரயில் ஒதுக்க முடியாது என தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க