April 28, 2018
தண்டோரா குழு
புதுச்சேரியில் சுத்தமான கிராமம் என்ற சான்றிதழ் பெற்றால்தான் இலவச அரிசி வழங்கப்படும் என்று புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.
கிராமங்களில் தூய்மைப்பணியை வலியுறுத்தும் வகையில் வறுமைக் கோட்டுக்கு கீழ் வசிக்கும் மக்களுக்கு வழங்கப்படும் இலவச அரிசி திட்டத்தில் தற்போது புதியமுறையை ஆளுநர் கிரண் பேடி கொண்டு வந்துள்ளார்.அதன்படி சுத்தமான கிராமம் என சான்றிதழ் பெற்றால் மட்டுமே இலவச அரிசி வழங்கப்படும் என்றும்,சுத்தமான கிராமம் என்ற சான்றிதழ் பெறாத கிராமங்களில் இலவச அரிசிவழங்கப்படாது என்று தெரிவித்துள்ளார்.
மேலும்,சுத்தமான கிராம சான்றிதழ் பெறும்வரை அரிசி சேமிக்கப்பட்டு மொத்தமாக வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.