• Download mobile app
20 Jun 2026, SaturdayEdition - 3783
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காவிரி விவகாரத்தில் 2 வாரம் கேட்ட கால அவகாசத்தை வாபஸ் பெற்றது மத்திய அரசு

April 27, 2018 தண்டோரா குழு

காவிரி வழக்கில் தீர்ப்பை அமல்படுத்த மேலும் 2 வார அவகாசம் கோரிய மனுவை மத்திய அரசு வாபஸ் பெற்றது.

காவிரி நடுவர் மன்ற வழக்கில் இறுதி தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம் 6 வார காலத்துக்குள் மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க உத்தரவிட்டது. எனினும், காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கவில்லை.ஆனால் 6 வார காலம் முடிவடைந்த பின் உத்தரவில் குறிப்பிட்டிருப்பது ஸ்கீமா? மேலாண்மை வாரியமா? என உச்சநீதிமன்றத்தில் மன்றத்தில் மத்திய அரசு விளக்கம் கேட்டு மனுத்தாக்கல் செய்தது. அதைப்போல் உச்சநீதிமன்ற உத்தரவை மதிக்காத மத்திய அரசு மீது தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது.

இம்மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம், மே 3-ந் தேதிக்குள் காவிரி நதிநீர் பங்கீட்டு திட்டத்தைத் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. இதற்கிடையில், இன்று இது தொடர்பாக பதில் மனுத் தாக்கல் செய்ய மேலும் 2 வார கால அவகாசத்தை உச்சநீதிமன்றத்திடம் கேட்டிருக்கிறது மத்திய அரசு. மேலும், உச்சநீதிமன்றம் உத்தரவுப்படி, நதிநீர் பங்கீட்டு வரைவு அறிக்கை இன்னமும் தயாராகவில்லை; அதனால் கால அவகாசம் கேட்கிறோம் என தலைமை நீதிபதியிடம் மத்திய அரசு தெரிவித்திருந்தது.

இந்நிலையில், காவிரி விவகாரத்தில் 2 வாரம் கேட்ட கால அவகாசத்தை மத்திய அரசு வாபஸ் பெற்றுள்ளது. தலைமை வக்கீல் அறிவுறுத்தல் பேரில் மனுவை மத்திய அரசு வாபஸ் பெற்றதாக தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க