• Download mobile app
21 Mar 2026, SaturdayEdition - 3692
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சிம்புவுக்காக ஒரு கதை ரெடி பண்ணியிருக்கேன்– ஆதிக் ரவிச்சந்திரன்

April 27, 2018 தண்டோரா குழு

ஜி.வி.பிரகாஷ் நடித்த ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் அடுத்ததாக சிம்புவை வைத்து ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படம் இயக்கினார்.இப்படத்தின் இரண்டாம் பாகமும் உருவாகும் எனக் கூறப்பட்டது.ஆனால்,படத்திற்கு எழுந்த நெகட்டிவ் கமெண்ட்ஸ்,தொடர்ந்து சிம்புவின் நடவடிக்கைகள் குறித்த சர்ச்சைகள் பலவும் கிளம்பியது.

இதற்கிடையில்,ஆதிக் ரவிச்சந்திரன் தனது அடுத்த படத்தின் வேலைகளை துவங்கிவிட்டார். ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடிக்கும் அப்படம் 3டியில் உருவாக இருக்கிறதாம்.அதில், ஹீரோயின்களாக ‘அனேகன்’ அமைரா தஸ்தூர், சஞ்சிதா ஷெட்டி மற்றும் புதுமுக நடிகை ஒருவர் நடிக்க இருக்கிறார்களாம்.

இந்நிலையில்,”சிம்புவுடன் சில தவறான புரிதல்கள் இருந்தது தான்.ஆனால் இப்போது எல்லாம் சரியாகிவிட்டது.நாங்கள் அடிக்கடி பேசிக் கொண்டுதான் இருக்கிறோம்.அவருக்கு ஒரு கதை ரெடி பண்ணியிருக்கேன்.ஆனால்,அது AAA இரண்டாம் பாகமாக இருக்காது.வேறு ஒரு ஆக்ஷன் த்ரில்லர் கதை, சிம்புவிடமும் கதை சொல்லிவிட்டேன். இந்தப் படம் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்” என ஆதிக் ரவிச்சந்திரன் கூறியிருக்கிறார்.

மேலும் படிக்க