• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் சி.பி.எஸ்.இ பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்க கோரி மதிமுகவினர் போராட்டம்

April 26, 2018 தண்டோரா குழு

சி.பி.எஸ்.இ பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்க கோரி கோவையில் மதிமுகவினர் இன்று போராட்டம் நடத்தினர்.

கட்டாய கல்வி உரிமை சட்டப்படி தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கனா 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் இந்த இட ஒதுக்கீட்டை மத்திய அரசின் சி.பி.எஸ்.இ பள்ளிகளிலும் வழங்க வலியுறுத்தி மதிமுக கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் ஈஸ்வரன் தலைமையில் கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஏழை மாணவர்களுக்கான ஒதுக்கீடு தகுந்த மாணவர்களுக்கு சென்று சேர்கிறதா என்பதை உறுதிபடுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.மேலும்,இணைய வழி விண்ணப்பம் அளிக்கும் முறையை அரசே செய்வதை போல சேர்க்கையும் அரசே நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்து கோஷங்களை எழுப்பினர்.ஏற்கெனவே பல முறை மனு அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி முற்றுகையில் ஈடுபட்டு உள்ளனர்.விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தால் மட்டுமே போராட்டம் கைவிடப்படும் என தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க