• Download mobile app
21 May 2024, TuesdayEdition - 3023
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நெல்லிக்காய் பிரியாணி

April 26, 2018 awesomecuisine.com

தேவையான பொருட்கள்:

பெரிய நெல்லிக்காய் – பத்து (கொட்டை நீக்கி, துருவியது)

பாசுமதி அரிசி – ஒரு கப் (இருபது நிமிடம் ஊறவைத்தது)

துருவிய தேங்காய் – கால் கப்

பச்சை மிளகாய் – இரண்டு

எண்ணெய் – மூன்று டேபிள்ஸ்பூன்

உப்பு – தேவைகேற்ப

வேர்கடலை – இரண்டு டேபிள்ஸ்பூன்

கொத்தமல்லி – சிறிதளவு

செய்முறை:

ஊறவைத்த பாசுமதி அரிசியை உதிரிஉதிரியாக சாதம் வடித்து எடுத்து கொள்ளவும்.கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நீளவாக்கில் நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, வேர்கடலை, துருவிய நெல்லிக்காய், துருவிய தேங்காய் சேர்த்து வதக்கி கொள்ளவும்.

தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி இறக்கி கொள்ளவும்.பாசுமதி வடித்த சாததை வதக்கிய கலவையில் கொட்டி உதிரி உதிரியாக கிளறவும்.கொத்தமல்லி இலை தூவி அலங்கரிக்கவும்.

மேலும் படிக்க