• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜப்பானிய நாட்டிற்கு நன்றி தெரிவித்த ஜி.வி.பிரகாஷ்

April 24, 2018 தண்டோரா குழு

இந்தியாவில் தமிழ் மொழியை பேசும் மக்கள் அதிகளவில் இருந்தாலும்,சிங்கப்பூர் மற்றும் இலங்கை போன்ற மற்ற நாட்டிலும் தமிழர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.இந்நிலையில்,ஜப்பானில் தமிழர்கள் கணிசமாக வசிக்கும் பகுதிகளில் ஜப்பானிய எழுத்துக்களுடன் தமிழ் எழுத்துக்களும் இடம்பெற்றுள்ள அறிவிப்பு பலகைகள் தற்போது வைக்கப்பட்டுள்ளன.அந்த அறிவிப்பு பலகை புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இந்நிலையில்,இது குறித்து நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் தனது ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.அதில்,”உலகம் போற்றும் எம் தாய்தமிழ்” என்று பெருமிதமாக பதிவிட்டுள்ள ஜீ.வி பிரகாஷ் குமார்,தமிழை தனது அறிவிப்பு பலகைகளில் ஏற்றுக்கொண்ட ஜப்பானிய நாட்டிற்கு நன்றி என தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க