• Download mobile app
20 Jun 2026, SaturdayEdition - 3783
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சென்னை இந்தியன் வங்கி கிளையில் பட்டபகலில் கொள்ளை முயற்சி

April 23, 2018 தண்டோரா குழு

சென்னை அடையாறு இந்தியன் வங்கியில் நுழைந்த மர்ம நபர்,வாடிக்கையாளர் ஒருவரிடம் துப்பாக்கியை காட்டி ரூ.6 லட்சம் பணத்தை பறித்துச் செல்ல முயன்ற சபவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அடையார் இந்திரா நகரில் உள்ள இந்தியன் வங்கி கிளையில் துப்பாக்கியை மறைத்து வைத்துக் கொண்டு வாடிக்கையாளர் போல் கொள்ளையன் வங்கிக்கு சென்றுள்ளான்.வங்கியில் வாடிக்கையாளர்கள் மிகவும் குறைவான அளவில் தான் இருந்துள்ளனர்.உணவு இடைவேளை நேரத்தை பயன்படுத்தி கொண்ட கொள்ளையன் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை காட்டி கணக்காளரிடமிருந்த பணத்தை எடுத்துக்கொண்டு வெளியே நிறுத்தி வைத்திருந்த அவரது இரு சக்கரவாகனத்தில் தப்பித்து சென்றுள்ளான்.

அப்போது,வேகமாக சென்று கொண்டிருந்த போது,முன்னாள் சென்ற வாகனத்தின் மீது மோதியுள்ளார்.அதில்,அவர் வைத்திருந்த துப்பாக்கியில் இருந்து வெடிசத்தம் எழுந்துள்ளது.சத்தம் கேட்டு பொதுமக்கள் பயந்து ஓடினார்.இதை பார்த்த அடையார் போக்குவரத்து ஆய்வாளர் கொள்ளையனை துரத்தி சென்று பிடித்துள்ளார்.துப்பாக்கி வைத்திருப்பது தெரிந்தும் துனிச்சலுடன் கொள்ளையனை பிடித்துள்ளார்.இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையடுத்து கொள்ளையனிடம் இருந்து ரூ.6 லட்சம் பணம் மற்றும் துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.பணத்தை கொள்ளையடித்துச் சென்றவர் வெளிமாநிலத்தை சேர்ந்த சுனில் நரேன் எனவும்,அவர் இதே பகுதியில் உள்ள யூனியன் வங்கி கிளையிலும் கொள்ளையடிக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க