April 21, 2018
தண்டோரா குழு
ஆந்திராவில்,முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்காக,திருநங்கைகள் கோயில் கட்டுகின்றனர்.
மாதாந்திர உதவித்தொகை,வீடு,குடும்ப அட்டை உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை, திருநங்கைகளுக்கு சந்திரபாபு நாயுடு அறிவித்திருந்தார்.இதற்கு நன்றி செலுத்தும் விதமாக திருநங்கைகள் அவருக்கு கோவில் கட்டுவதாக கூறியுள்ளனர்.
இதற்கான அடிக்கல் நாட்டும் விழா அம்மாநிலம் நந்தியாலில் நடைபெற்றது. இதில் மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் பூமா அகிலா அடிக்கல் நாட்டினார்.30 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படும் கோவிலில், சந்திரபாபு நாயுடுவின் வெள்ளி சிலை வைக்கப்படும் என்று திருநங்கைகள் தெரிவித்தனர்.