• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் கட்டாய கல்வி உரிமை சட்டம் – சி.பி.எஸ்.இ பள்ளிகளை இணைக்க வேண்டி மதிமுகவினர் மனு

April 20, 2018 தண்டோரா குழு

கோவையில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி,ஏழை மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டை, மத்திய அரசின் கீழ் செயல்படும் சி.பி.எஸ்.இ பள்ளிகளிலும் வழங்க கோரி மதிமுகவினர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் இன்று(ஏப் 20)மனு அளித்தனர்.

கட்டாய கல்வி உரிமை சட்டப்படி தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கனா 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் இந்த இட ஒதுக்கீட்டை மத்திய அரசின் சி.பி.எஸ்.இ பள்ளிகளிலும் வழங்க வலியுறுத்தி இன்று மதிமுக கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் ஈஸ்வரன் தலைமையில் கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அய்யன்னனிடம் மனு அளித்தனர்.

மேலும்,இணைய வழி விண்ணப்பம் அளிக்கும் முறையை அரசே செய்வதை போல சேர்க்கையும் அரசே நடத்த வேண்டும்,என கோரிக்கை வைத்தார்.இது குறித்து பள்ளி கல்வி துறை இயக்குனரிடம் தெரிவிக்கப்படும்,என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உறுதி அளித்ததாக மதிமுகவினர் தெரிவித்தனர்.

மேலும் படிக்க