• Download mobile app
06 Nov 2025, ThursdayEdition - 3557
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் கட்டாய கல்வி உரிமை சட்டம் – சி.பி.எஸ்.இ பள்ளிகளை இணைக்க வேண்டி மதிமுகவினர் மனு

April 20, 2018 தண்டோரா குழு

கோவையில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி,ஏழை மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டை, மத்திய அரசின் கீழ் செயல்படும் சி.பி.எஸ்.இ பள்ளிகளிலும் வழங்க கோரி மதிமுகவினர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் இன்று(ஏப் 20)மனு அளித்தனர்.

கட்டாய கல்வி உரிமை சட்டப்படி தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கனா 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் இந்த இட ஒதுக்கீட்டை மத்திய அரசின் சி.பி.எஸ்.இ பள்ளிகளிலும் வழங்க வலியுறுத்தி இன்று மதிமுக கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் ஈஸ்வரன் தலைமையில் கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அய்யன்னனிடம் மனு அளித்தனர்.

மேலும்,இணைய வழி விண்ணப்பம் அளிக்கும் முறையை அரசே செய்வதை போல சேர்க்கையும் அரசே நடத்த வேண்டும்,என கோரிக்கை வைத்தார்.இது குறித்து பள்ளி கல்வி துறை இயக்குனரிடம் தெரிவிக்கப்படும்,என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உறுதி அளித்ததாக மதிமுகவினர் தெரிவித்தனர்.

மேலும் படிக்க