• Download mobile app
06 Nov 2025, ThursdayEdition - 3557
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் பவுண்டரி தொழிற்சாலைகள் வேலை நிறுத்த போராட்டம்

April 20, 2018 தண்டோரா குழு

கோவையில் பவுண்டரி தொழிற்சாலைகள் வேலை நிறுத்த போராட்டத்தில் இன்று(ஏப் 20) ஈடுபட்டுள்ளனர்.

பல்வேறு தொழில்கள் செய்வதற்கான மூலப் பொருட்களின் விலை கடந்த சில மாதங்களாக உயர்ந்து வருகிறது.இந்நிலையில் பவுண்டரி (வார்ப்பட) தொழில்கள் செய்வதற்கான மூலப் பொருட்களின் விலை உயர்வு காரணமாக கோவையில் பவுண்டரி தொழிற்சாலைகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் 400 க்கும் மேற்பட்ட பவுண்டரி தொழிற்சாலைகள் மூடப்பட்டு உள்ளன.கோவையில் அரசூர், மாணிக்கம் பாளையம்,கணபதி,தண்ணீர் பந்தல் உள்ளிட்ட பகுதிகளில் வேலை நிறுத்தத்தின் காரணமாக ஒரு நாளைக்கு 200 கோடி ரூபாய் வரை உற்பத்தி இழப்பு ஏற்பட்டு உள்ளது.

மேலும்,வேலை நிறுத்தம் காரணமாக ஐந்து லட்சம் தொழிலாளர்கள் மறைமுகமாகவும்,மூன்று லட்சம் பேர் நேரடியாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் உடனடியாக இந்த பிரச்சனைக்கு அரசு தீர்வு காண வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் படிக்க