• Download mobile app
25 Jun 2026, ThursdayEdition - 3788
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அப்துல்கலாம் பயின்ற பள்ளியில் மின்இணைப்பு துண்டிப்பு

April 19, 2018 தண்டோரா குழு

ராமேசுவரத்தில் அப்துல் கலாம் பயின்ற அரசுப் பள்ளியில் 2 ஆண்டுகளாக மின்கட்டணம் செலுத்தப்படாததால் மின் இணைப்பினை மின்வாரிய அதிகாரிகள் இன்று(ஏப் 19)துண்டித்தனர்.

மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் ராமேசுவரம் வர்த்தகன் தெருவில் உள்ள மண்டபம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலும் படித்தார். மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளால் பராமரிக்கப்பட்டு வரும் இந்த பள்ளி தரம் உயர்த்தப்பட்டு 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலும் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.

இந்த பள்ளியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக மின்சார கட்டணம் செலுத்தப்படாமல் உள்ளதையடுத்து இன்று பள்ளிக்கு சென்ற மின்வாரியத்துறை அதிகாரிகள் பள்ளியின் மின்இணைப்பை துண்டித்தனர்.இதனால் மாணவ மாணவிகள் மின்சாரம் இல்லாமல் அவதி அடைந்துள்ளனர்.இதனையடுத்து கல்வி மேலாண்மைக் குழு மின் கண்டணத்தை கட்டுவதாக உறுதியளித்ததையடுத்து மீண்டும் மின் இணைப்பு கொடுக்கப்பட்டது.

மேலும் படிக்க