• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நாளை டெல்லி பயணம்

April 18, 2018 தண்டோரா குழு

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நாளை டெல்லி செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் பொறுப்பேற்று ஆறு மாதங்கள் கடந்த நிலையில் அரசுத் திட்டங்கள் குறித்து பல்வேறு இடங்களில் ஆய்வு நடத்தியது,பேராசிரியர் நிர்மலா தேவி விவகாரத்தில் விசாரணை நடத்த உத்தரவிட்டது,அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தராக கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சூரப்பாவை நியமித்தது என ஆளுநர் மீது எதிர்கட்சிகள் குற்றசாட்டுகள் வைத்து வருகின்றனர்.

இதற்கிடையில்,நேற்று பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது பெண் பத்திரிகையாளர் ஒருவரை ஆளுநர் பன்வாரிலால் கன்னத்தில் தட்டிய விவகாரம் தற்போது கடும் சர்ச்சையைக் கிளப்பியது. இதையடுத்து ஆளுநர் அவரிடம் மன்னிப்பு கோரினார்.எனினும்,ஆளுநரை திரும்பப் பெற வலியுறுத்தி திமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின்
கூறியுள்ளார்.இந்நிலையில்,ஆளுநர் பன்வாரிலால் நாளை டெல்லி செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் படிக்க