• Download mobile app
21 Mar 2026, SaturdayEdition - 3692
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தென் கொரியா சர்வதேச திரைப்பட விழாவில் விஜய்யின் மெர்சல்

April 18, 2018 தண்டோரா குழு

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த தீபாவளியன்று வெளியான படம் ‘மெர்சல்’.பெரும் சர்ச்சைக்கு மத்தியிலும் இப்படம் ரசிகர்களின் அமோக வரவேற்பைப் பெற்று வசூல் சாதனை படைத்தது. சமந்தா, காஜல் அகர்வால், வடிவேலு, நித்யா மேனன், எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் நடிப்பில் வெளியான இந்தப் படத்தை ஶ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பிரமாண்டமாகத் தயாரித்திருந்தது.இப்படத்திற்கு பல்வேறு விருதுகளும் கிடைத்தது.

இதுமட்டுமின்றி சமீபத்தில்,’மெர்சல்’படத்திற்கு பிரிட்டன் விருது கிடைத்தது.இந்நிலையில்,தென் கொரியாவில் நடைபெறவிருக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்க ‘மெர்சல்’ திரைப்படத்துக்கு அழைப்பு வந்துள்ளதாக ஶ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க