• Download mobile app
07 May 2024, TuesdayEdition - 3009
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தென் கொரியா சர்வதேச திரைப்பட விழாவில் விஜய்யின் மெர்சல்

April 18, 2018 தண்டோரா குழு

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த தீபாவளியன்று வெளியான படம் ‘மெர்சல்’.பெரும் சர்ச்சைக்கு மத்தியிலும் இப்படம் ரசிகர்களின் அமோக வரவேற்பைப் பெற்று வசூல் சாதனை படைத்தது. சமந்தா, காஜல் அகர்வால், வடிவேலு, நித்யா மேனன், எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் நடிப்பில் வெளியான இந்தப் படத்தை ஶ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பிரமாண்டமாகத் தயாரித்திருந்தது.இப்படத்திற்கு பல்வேறு விருதுகளும் கிடைத்தது.

இதுமட்டுமின்றி சமீபத்தில்,’மெர்சல்’படத்திற்கு பிரிட்டன் விருது கிடைத்தது.இந்நிலையில்,தென் கொரியாவில் நடைபெறவிருக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்க ‘மெர்சல்’ திரைப்படத்துக்கு அழைப்பு வந்துள்ளதாக ஶ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க