• Download mobile app
15 May 2025, ThursdayEdition - 3382
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை நீதிமன்றம் முன்பாக பெண் வழக்கறிஞர்கள் ஆர்பாட்டம்

April 17, 2018 தண்டோரா குழு

காஷ்மீரில் கோவிலுக்குள் வைத்து சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு கோவை நீதிமன்றம் முன்பாக பெண் வழக்கறிஞர்கள் இன்று(ஏப் 17)ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர்.

சிறிமி படுகொலைக்கு நீதி வேண்டும் எனக் கோரி கோவை நீதிமன்ற வளாகம் முன்பாக திரண்ட 50 க்கும் மேற்பட்ட பெண் வழக்கறிஞர்கள் கையில் பதாகைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பினர்.
மேலும்,சிறுமியின் படுகொலை சம்பவத்தை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைத்து தினசரி உரிய முறையில் விசாரணை நடத்தி தீர்ப்பளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

இதேபோல் உத்தரபிரதேசத்தில் 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த பாஜக எம்.எல்.ஏ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.சிறுமி ஆசிபா வழக்கில் குற்றவாளிகளை தப்பிக்கவிடாமல் அவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்துள்ளதாகவும்,அதை கண்டிப்பதாக கூறி மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

மேலும் படிக்க