• Download mobile app
22 Dec 2025, MondayEdition - 3603
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பேராசிரியர் நிர்மலா தேவி தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

April 17, 2018 தண்டோரா குழு

பேராசிரியர் நிர்மலா தேவி தொடர்பான வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

மாணவிகளிடம் மதிப்பெண் ஆசை காட்டி பாலியல் பேரம் பேசிய அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி நேற்று கைது செய்யப்பட்டார்.இதையடுத்து இரண்டாவது நாளாக போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.இதற்கிடையில்,இது குறித்து ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் விசாரணை நடத்த தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நேற்று உத்திரவிட்டிருந்தார்.

இந்நிலையில்,கல்லூரி மாணவிகளுக்கு பேராசிரியை நிர்மலாதேவி பாலியல் அழைப்பு விடுத்ததாக தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் படிக்க