• Download mobile app
22 Dec 2025, MondayEdition - 3603
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தன்னைத் தானே செருப்பால் அடித்துக் கொண்ட நடிகை ஸ்ரீரெட்டியால் பரபரப்பு !

April 17, 2018 தண்டோரா குழு

தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி தெலுங்கு திரையுலக பிரபலங்கள் மீது பாலியல் புகார்களைக் கூறி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.நடிகை ஸ்ரீரெட்டி,அண்மையில் அரை நிர்வாணப் போராட்டம் நடத்தி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.இது மட்டுமின்றி தெலுங்கு நடிகர் சங்கத்தின் மீது அடுக்கடுக்கான புகார்களைக் கூறினார்.

இதற்கிடையில்,இது தொடர்பாக கருத்து தெரிவித்த நடிகர் பவன் கல்யாண், நடிகை ஸ்ரீரெட்டி நீதிமன்றத்தை நாட வேண்டும்.தொலைக்காட்சிகளால் செய்திகளை வழங்க முடியுமே தவிர,நீதி வழங்க முடியாது எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில்,இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் நடிகை ஸ்ரீரெட்டி, பவன் கல்யாணை சகோதரராக கருதியதற்கு தன்னையே செருப்பால் அடித்துக்கொள்ள வேண்டுமென கூறினார். உடனே செய்தியாளர்கள் முன்னிலை செருப்பால் அடித்துக்கொண்டு நடிகை ஸ்ரீரெட்டி பரபரப்பை ஏற்படுத்தினார்.

மேலும் படிக்க