• Download mobile app
25 Jun 2026, ThursdayEdition - 3788
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

திருமணம் முடிந்த கையோடு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட வந்த மணமக்கள்

April 16, 2018 தண்டோரா குழு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி நடைபெற்று வரும் போராட்டத்தில் புதுமணத் தம்பதிகள் மணக்கோலத்தில் கலந்து கொண்டனர்.

மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அனுமதி புதுப்பிக்கப்படாததால் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையை, நிரந்தரமாக மூடக்கோரி தூத்துக்குடி நகரின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒருபகுதியாக தூத்துக்குடியில் உள்ள பனிமய மாதா ஆலயத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக இரண்டாவது நாளாக போராட்டம் நடந்து வருகிறது. ஆலய வளாகத்தில் பந்தல் அமைத்து கருப்புக்கொடி கட்டி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் புதுத்தெரு பகுதியைச் சேர்ந்த ஜோசப் – ஷைனி தம்பதியின் திருமணம் திரு இருதய ஆலயத்தில் நடைபெற்றது. இதையடுத்து, திருமணம் முடிந்த கையோடு மணமக்கள் வீட்டிற்கு செல்லாமல் மணக்கோலத்தில் பனிமயமாதா ஆலயத்திற்கு வந்து போராட்டப் பந்தலில் அமர்ந்து முழக்கங்களை எழுப்பினர்.


இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அந்த தம்பதியினர்,

ஸ்டெர்லைட் ஆலையால் பலருக்கும் கேன்சர் பரவுகிறது. அதிகம் குழந்தைகள் தான் கேன்சரால் பாதிக்கபட்டு உயிரிழக்கின்றனர். நோயற்ற சமுதாயம் உருவாக வேண்டும் என்ற நோக்கத்துடன் போராட்டத்தில் கலந்து கொண்டதாக கூறினர்.

மேலும் படிக்க