• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தொடரும் பாலியல் வன்கொடுமைக்கு எதிராக வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியா கட்சியினர் ஆர்பாட்டம்

April 14, 2018 தண்டோரா குழு

காஷ்மீரில் ஆசிஃபா, உன்னோவில் தலித் சிறுமி, ஜார்கண்டில் அஃப்சானா ஆகியோரை வன்புணர்வுக்கு ஆளாக்கி கொடுமைப்படுத்திய பாஜக, சங்பரிவார் கயவர்களையும் அவர்களுக்கு ஆதரவாகச் செயல்பாடும் பாஜக அரசுகளையும், தலைவர்களையும் கண்டித்து கோவை ஆத்துப்பாலம் பெரியார் சிலை அருகில் வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியா கட்சி, சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்பாட்டத்திற்கு அக்கட்சியின் கோவை மாவட்டத்தலைவர் கே.எஸ்.அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கினார். மேலும், இந்த ஆர்பாட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் EMS இப்ராஹீம், மாவட்ட பொதுச் செயலாளர் ஆர். பீர் முகம்மது, துணைத்தலைவர்கள் AJ ரெஜீனா, MS சபீர் அலி, மாநில நிர்வாககுழு உறுப்பினர் ஷாஜஹான், தெற்கு மண்டலத் தலைவர் முஜிப், இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பின் கோவை மாவட்டத் தலைவர் ஷபீர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

மேலும் படிக்க