• Download mobile app
24 Mar 2026, TuesdayEdition - 3695
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் பயன்படுத்தப்பட்ட கார்களின் விற்பனை கண்காட்சி

April 14, 2018 தண்டோரா குழு

கோவையில் முதல் முறையாக பயன்படுத்தப்பட்ட கார்களின் கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெறுகிறது.இந்த கண்காட்சியில் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 700 க்கும் மேற்பட்ட கார்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள லட்சுமி நாராயண கல்யாண மண்டபத்தில் உபயோகப்படுத்தப்பட்ட கார்கள் விற்பனையாளர் சங்கத்தின் சார்பில் இன்று முதல் மூன்று நாட்கள் வரை மிக பிரமாண்டமாக பழைய கார்களின் கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெறுகிறது,

இந்த கண்காட்சியில் பல்வேறு மாவட்டம் மற்றும் மாநிலங்களை சேர்ந்த 700 க்கும் மேற்பட்ட கார்கள் இடம்பெறவுள்ளது.காலை பத்து மணி முதல் இரவு எட்டு மணி வரை இந்த கார் மேளா நடைபெறவுள்ளது.பழைய கார்கள் விற்பனை வரலாற்றில் முதல் முறையாக ஸ்மார்ட் டிரைவிங் வசதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

மேலும்,அனைத்து கார்களும் ஆவணங்கள் மற்றும் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளனர்.விரைவான விற்பனைக்காக சிறப்பு கவுண்டர்கள் திறக்கப்படவுள்ளது.மேலும் விற்பனையாளர்களின் வசதிக்காக ஏல கவுண்டரும் திறக்கப்படவுள்ளது. 50 ஆயிரம் முதல் 50 லட்ச ரூபாய் வரையில் கார்கள் இடம்பெற உள்ளது. வாகனங்களை வாங்குவத்கராக சிறப்பு கடன் வசதிகளும் செய்து தரப்பட உள்ளது.

மேலும் படிக்க